Wednesday, January 2, 2013

இனி நமது தமிழினத்தின் ஆதித்தலைவனையே சரணடைவோம்

அன்பு நண்பர்களே,

வாழிய தமிழ் இனம்.

இதுவரை தமிழர்களை ஒன்றுபடுத்த பலரும் பல வழிகளில் முயன்று ஒற்றுமைக்கு பதில் வேற்றுமையே தலையெடுத்து தாண்டவமாடுகிறது. காரணம் தமிழர்களிடையே அவர்களின் அடிப்படை தன்மையை மாற்ற முற்பட்டதுதான். தமிழரின் அடிப்படை தன்மை என்ன ?

தமிழர்தம் அடிப்படை ஆன்மீகம். அதை விடு்த்து நாத்திகத்தினாலோ, அரசியல் கட்சிகளினாலோ. சாதிய அமைப்புகளாலோ. வேறு எந்த வழியினாலோ தமிழினத்தை ஒன்றுபடுத்த முடியாது என்பதை கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆதிகாலம் தொட்டு இன்று வரை தமிழரின் தன்னிகரில்லாத தலைவனாக, தமிழரின் கடவுளாக, தமிழ் மொழியை தோற்றுவித்த நமது முருகப்பெருமான் இருந்து வருகிறார்.

ஆனால் நாம் நமது தன்னிகரில்லா தலைவனான கந்தசாமியை மறந்து விட்டு வெந்ததை தின்று விட்டு வந்ததை உளறிக்கொண்டிருப்பவர்களின் பின்னால் சென்று கொண்டிருந்தோம். பாவம் அவர்கள் தங்களையே காப்பாற்றிக் கொள்ள போராடிகொண்டிருக்கும்போது தமிழர்களை எப்படி காப்பாற்றுவார்கள்.

இவர்களையெல்லாம் நம்பி நாம் மோசம் போனது போதும்.

இனி நமது தமிழினத்தின் ஆதித்தலைவனையே சரணடைவோம்.

தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானை தலைவனாக கொண்டு செயல்பட வேண்டு்ம் என்னும் நல்ல நோக்கத்தில் இறைவன் கந்தசாமியின் பெயரால் கந்த சேனை எனும் அமைப்பினை தொடங்கி தமிழினத்தை ஒருங்கினைப்போம்.

முதலில் இதை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைப்போம். அடுத்து உலக தமிழர்களை கந்தசாமியின் திருவருளால் ஒருங்கிணைப்போம்.

கூடிய விரைவில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

உண்மையில் தமிழர் நலனில் அக்கறையும், தமிழர்களை சாதி கடந்து ஒருங்கிணைக்க வேண்டும் நல் நோக்கமும் உள்ள அன்பு உள்ளங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.

அன்பு தமிழ் சொந்தம்
நக்கினம் சிவம்
ஒருங்கிணைப்பாளர்
கந்த சேனை
கைபேசி - 9994751344
மின்னஞ்சல் - nakinam@gmail.com

1 comment:

  1. உங்கள் அமைப்பின் போஸ்டர்கள் அருமை வீரத்ததின் வெளிப்பபாடு. எனது விருப்பம் தமிழன் என பிரிவதை விட இந்து என ஒண்றுபடலாமே
    :

    ReplyDelete